தென் கொரியாவில் பயங்கரம்: தடை செய்யப்பட்ட திரைப்படத்தை பார்த்த சிறுவனுக்கு 14 ஆண்டுகள் சிறை! December 7, 2021 9:21 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest தென் கொரியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற ‘விரோத’ நாடுகளில் இருந்து வரும் அனைத்து கலாச்சார பொருட்களும் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.தென் கொரிய சினிமாவான ‘தி அங்கிள்’ படத்தை 5 நிமிடங்கள் பார்த்ததற்காக யாங்காங் மாகாணத்தைச் சேர்ந்த 14 வயது மாணவருக்கு 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.ஹைசன் சிட்டியின் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கூடத்தில் அந்த மாணவர் சினிமாவை பார்த்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார் இது குறித்து ஒரு உள்ளூர் செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.தென் கொரிய திரைப்படங்கள், பதிவுகள், தொகுப்புகள், புத்தகங்கள், பாடல்கள், ஓவியங்கள் மற்றும் புகைப்படங்களை நேரடியாகப் பார்த்த, கேட்ட, அல்லது வைத்திருப்பவர்களுக்கு ‘ ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை கிடைக்கும்.முன்னதாக, பிரபல நெட்பிளிக்ஸ் நிகழ்ச்சியான ஸ்க்விட் கேமைப் பார்த்து வடகொரியாவில் மாணவர்கள் பிடிபட்டதால் கடுமையான தண்டனை பெற்றதாக அமெரிக்க செய்தி ஊடகமான ரேடியோ பிரீ ஏசியா தெரிவித்து இருந்தது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… கனடாவில் உணவுப் பிரியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…