நிலுவை கட்டணத்தை செலுத்துவதன் மூலம் மின் துண்டிப்பை தவிர்க்க முடியும் December 24, 2021 9:09 am Twitter Facebook Google+ LinkedIn Pinterest நிலுவை மின் கட்டணத்தில் ஒரு தொகையினை செலுத்துவதன் மூலம் மின் பாவனையாளர்கள் மின் துண்டிப்பினை தவிர்த்துகொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஆர். ரணதுங்க தெரிவித்துள்ளார்.நிலுவை மின் கட்டணத்தை செலுத்தாத மின் பாவனையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை சிவப்பு பட்டியலை அனுப்பி வைத்துள்ளதுடன், மின் துண்டிப்பிற்கான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மின்பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.அத்துடன், கொரோனா தொற்றினால் நாடு முடக்கப்பட்டு தொழில்வாய்ப்புக்களை இழந்துள்ள மக்கள் வருமானத்திற்கான மார்க்கத்தினையும் இழந்துள்ளதாக மின்பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் நிலுவையிலுள்ள மின் கட்டணத்தை முழுமையாக செலுத்துமாறு இலங்கை மின்சார அறிவித்துள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நிவாரணம் வழங்கப்படுதல் அவசியம் எனவும் மின் பாவனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.எனவே மின் கட்டணத்தில் ஒரு தொகுதியை செலுத்துவதன் ஊடாக க மின் இணைப்பு துண்டிப்பினை தவிர்த்துக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ஆர் ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி! Related Posts கோட்டாவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முயற்சி! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… 13ஐ ரணிலும் நடைமுறைப்படுத்தமாட்டார்! * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்… மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரம்: தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள அநுரகுமார திசாநாயக்க * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன்…