மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையில் ரயில் நிலைய அதிபர்கள்..

இரயில் நிலைய அதிபர்கள் சங்கம் உடன் அமுலாகும் வகையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளது.

இரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் உப தலைவரை பணி இடைநிறுத்தம் செய்வதற்கு பொது முகாமையாளரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சங்க நடவடிக்கை மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இரயில் நிலைய அதிபர்கள் இன்று நண்பகல் முதல் தமது கடமைகளில் இருந்து விலகி செயற்பட்டு வருகின்றனர்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!