சுயாதீனப் பங்காளிகளுடன் நடத்திய சந்திப்பு தோல்வி!

அரசாங்கத்தில் இருந்து கடந்த வாரம் விலகி சுயாதீனமாகச் செயற்படவுள்ளதாக அறிவித்த 41 பாராளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேற்று சந்தித்திருந்த நிலையில், எந்த இணக்கப்பாடும் இன்றி முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    
அந்த சந்திப்பில் இடைக்கால அரசாங்கம் குறித்து முக்கியமான எதுவும் பேசப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.

கட்சிகளுக்கிடையிலான உறவுகளை பேணுவதன் அடிப்படையில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், மேலதிக கலந்துரையாடலுக்காக மீண்டும் சந்திப்பதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!