எதிர்க்கட்சி தலைவர் இன்று விசேட அறிக்கை

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் விசேட அறிக்கையொன்றினை வெளியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் அவர் குறித்த அறிக்கையினை வெளியிடவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் சர்வகட்சி அரசாங்கத்தினை விரைவில் அமைப்பதற்கு தற்போது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களுடன் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனிடையே, மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக அடுத்த வாரம் முதல் நாடு முழுவதும் பாரிய தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது. 

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!