வடக்கின் நிலவரங்கள் குறித்து கேட்டறிந்த தமிழ்நாட்டுப் பிரமுகர்கள்

தமிழ்நாட்டில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ‘தினமணி’ ஆசிரியர் வைத்தியநாதன், திமுகவை சேர்ந்த சட்டவாளரும், எழுத்தாளருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன், மற்றும் கவிஞர் இனியபாரதி ஆகியோர், வவுனியாவில் வடபகுதி நிலவரங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

வவுனியாவில் உள்ள தமிழ் அரசுக் கட்சி செயலகத்தில் நேற்று மாலை இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசபை உறுப்பினர்களான சிவனேசன், ரவிகரன், சத்தியலிங்கம், லிங்கநாதன், மற்றும் வவுனியா வடக்கு, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது வடக்கிலுள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!