அமெரிக்க அதிபருடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நியூயோர்க்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்துக் கலந்துரையாடினார்.

ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் உலகத் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்றுமுன்தினம் விருந்துபசாரம் அளித்தார்.

இந்த விருந்துபசாரத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றார்.

இதன்போது, சிறிலங்கா அதிபரும், அமெரிக்க அதிபரும் தமது வாழ்க்கைத் துணைவியருடன் ஒளிப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!