அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ். நகரில் இன்று போராட்டம்!

அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அரசியல் கைதிகளை துரிதமாக விடுவிக்கக் கோரியும், பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு யாழ். பஸ் நிலையம் முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

அனுரதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் கடந்த 14 ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களின் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. அவர்களின் கோரிக்கை அரசால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகின்றமையால் மருத்துவ உதவிகளையும் அவர்கள் தற்போது நிராகரித்துள்ளனர். இந்நிலையில் கைதிகளின் போராட்ட நியாயத்தை வெளிப்படுத்தும் முகமாகவும் கைதிகளின் போராட்டத்துக்குப் பலம் சேர்த்து அவர்களது விடுதலையை விரைவாக்க வலியுறுத்தியும் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!