முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார் – உதயகுமார்

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார் என்று அமைச்சர் எஸ்.பி.உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

‘கருணாநிதியின் குடும்ப சொத்து விபரங்கள் பற்றி மு. க. ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? கருணாநிதி, மகன்கள், மகள்கள் உள்ளிட்டோரின் சொத்து விபரங்கள் பற்றி கேள்வி கேட்க நான் ஒரு குழுவை நியமிக்கிறேன்.

பத்திரிகையாளர் முன் எமது குழு கேட்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் சொல்ல முடியுமா? முடியாதா? என்பதை ஸ்டாலின் தான் சொல்லவேண்டும்.

முதலமைச்சர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் சுமத்துகிறார். பொறுப்பற்ற அவதூறு பேச்சுகளை நிறுத்திவிட்டு பண்பட்ட அரசியல் பணிகளை ஸ்டாலின் மேற்கொள்வது அவசியம்.’ என அந்த அறிக்கையில் அமைச்சர் உதயகுமார் தெரிவித்திருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!