வெற்றிபெற்று விட்டார் விக்னேஸ்வரன்! – பாராட்டுத் தெரிவித்த சுமந்திரன்

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மக்களின் அரசியல் அபிலாஷைகளைச் சர்வதேசத்துக்கு உரத்துச் சொல்வதில் வெற்றியடைந்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், தெரிவித்துள்ளார். எனினும், போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்கட்டுமானம் தொடர்பில், அம்மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அவர் தவறியுள்ளார் எனவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, எழுப்பட்ட வினா ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில், பயங்கரமான ஒடுக்குமுறைக்குள் வடக்கு மக்கள் இருந்தபோது, விக்னேஸ்வரன் கொண்டிருந்த ஆளுமையும் அவர் குறித்துச் சர்வதேசத்துக்கு இருந்த எண்ணத்தையும் உபயோகித்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.

எனினும், மாகாண சபையின் போதாத அதிகாரங்களைக் கூட, சரியாக உபயோகித்து, போரால் எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டும் என்று மக்கள் கொடுத்த ஆணையை, முதலமைச்சர் தலைமையிலான வடக்கு மாகாண சபை, எந்த விதத்திலும் நிறைவேற்றவில்லை” எனவும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!