ஜனாதிபதியிடம் அமைச்சர் பதவியைக் கேட்கவில்லை! – என்கிறார் தயாசிறி

அமைச்சுப் பதவி எதையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தான் கோரவில்லை என முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவை மாற்றம் ஒன்றை மேற்கொள்ளப் போகிறாரெனவும், முன்னாள் அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும், செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில், கருத்து தெரிவித்த அவர், தனக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படப் போவதாக, எந்தவொரு செய்தியையும் தான் பார்க்கவில்லை என்றும், அது தொடர்பில் தனக்கு முழுமையாக எதுவும் தெரியாது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டல் அதனை ஏற்றுக்கொள்வாரா என்று வினவியமைக்கு, தான் எந்தவிதமான அமைச்சுகளையும் தனக்கு வழங்குமாறு கேட்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!