தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை – எனாம் காம்பீர்

தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் ஐ.நா. அறிவித்துள்ள 132 தீவிரவாதிகளுக்கு அந்நாடுதான் புகலிடம் அளித்து வருகிறது. 22 தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதும் பாகிஸ்தான் தான் என ஐ.நா. சபைக்கான இந்திய செயலாளர் எனாம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது கூட்டம் அமெரிக்காவின் தலைநகரான நியூயோர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வெளியுறவத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்றுமுன்தினம் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்.

அங்கு அவர், கொலையாளிகளை புகழும் பாகிஸ்தானுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குரேஷி, பாகிஸ் பாகிஸ்தானின் பெஷாவரில் கடந்த 2014 ஆம் ஆண்டு பாடசாலை ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் குழந்தைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு இந்தியாவுடன் தொடர்புள்ளது.

பெஷாவர் பள்ளி மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் இந்தியாவின் ஆதரவு பெற்றவர்கள். மேலும் இரு நாடுகளுக்கிடையேயான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டதற்கு இந்தியாதான் காரணம் என குற்றம் சுமத்தினர் குரேஷி.

மேற்கண்ட பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்து உரையாற்றுகையிலேயே ஐ.நா.வுக்கான இந்திய செயலாளர் எனாம் காம்பீர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐ.நா. சபையில் இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,

பெஷாவரில் பாடசாலை குழந்தைகள் கொல்லப்பட்ட சம்பவத்தின்போது பாகிஸ்தானின் துயரத்தில் இந்தியாவும் பங்கெடுத்தது. இதனை நான் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறேன். பெஷாவர் சம்பவத்திற்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாகிஸ்தான் குழந்தைகளுக்காக 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தீவிரவாதத்திற்கு எதிராக போரிடுகிறோம் என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. ஆனால் ஐ.நா. அறிவித்துள்ள 132 தீவிரவாதிகளுக்கு அந்நாடுதான் புகலிடம் அளிக்கிறது. 22 தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதும் பாகிஸ்தான் தான். இதனை அந்நாடு மறுக்க முடியுமா?. மும்பை தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஹபீஸ் சயீது பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார். தீவிரவாதத்தை கைவிட்டால் பாகிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் என்றும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!