சிரிய உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு கண்மூடித்தனமான ஆதரவை வழங்குகிறது என்ற குற்றச்சாட்டில் ரஷ்யா மீது பொருளா தாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா.
சிரியாவில், சிரிய அதிபர் அசாத்துக்கு எதிராகப் போராடிவரும் ஆயுதக் குழுவின் பிடியில் உள்ள கவுட்டா, டௌமா நகர்களில் கடந்த வாரம் இரசாயனவியல் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை சிரிய அரசே நடத்தியது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியது. மேற்கத்தைய நாடுகள் பலவும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டன. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அமெரிக்காவின் தலைமையில் பிரிட்டன், பிரான்ஸ் இணைந்து சிரியாவில் தாக்குதல் நடத்தின.
சிரிய இராணுவத்துக்குச் சொந்தமான ஆயுதக் கிடங்குகள், இரசாயன ஆயுதம் தயாரிக்கும் இடங்கள் என்று கருதப்படும் இடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்தது.
சிரியா தொடர்ந்து இலக்கு வைக்கப்பட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்தது ரஷ்யா. இதையடுத்தே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது அமெரிக்கா. ரஷ்யாவும் அமெரிக்கா மீது பொருளாதாரத் தடைகளை விரைவில் விதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!