பிரியாவிடை கொடுக்கப்பட்ட மேஜர் ஜெனரலுக்கு கடைசி நேரத்தில் சேவை நீடிப்பு

சிறிலங்காவின் இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோ, நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த நிலையில், திடீரென அவருக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், மூன்று மாத கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்றுடன் ஓய்வுபெறவிருந்த மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு, இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுவதற்கு சற்று முன்பாகவே, அவருக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

எனினும், இந்தச் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது தெரியாததால், மேஜர் ஜெனரல் டம்பத் பெர்னான்டோவுக்கு நேற்று பிரியாவிடை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல், டம்பத் பெர்னான்டோ, கடந்த மார்ச் 27ஆம் நாள் சிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!