ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம் ஜோடியினர்!

ஹைதராபாத்தில் தங்கியிருந்த இடத்தின் ரகசியம் பெற்றோருக்கு தெரிந்ததால், இளம் ஜோடியினர் 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹைதராபாத்தில் Alwal பகுதியை சேர்ந்த இளம் ஜோடியினர் மனிஷ் (20) மற்றும் அக்சயா (18). தூரத்து சொந்தங்களான இருவரும் 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.

ஆனால் இவர்களுடைய காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் இருவரும் கடந்த மாதம் 28-ம் தேதி வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து அக்சயாவின் பெற்றோர் மகளை காணவில்லை என பொலிஸாரிடத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இருவரும் Sri Chakra complex-ல் அறை எடுத்து தங்கவிருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் அங்கு விரைந்த பொலிஸார் ஒவ்வொரு தளமாக சோதனை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் இருவீட்டாரின் பெற்றோர்களும், தங்களுடைய இருப்பிடத்தை கண்டறிந்து விட்டனர் என்பதை அறிந்த இருவரும் உடனடியாக 3-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இந்த சம்பவத்தில் இருவருக்கும் கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் ஹைதராபாத் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!