ஒன்லைன் மூலம் 13 வயது சிறுவனுக்கு வலை வீசி பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபர் கைது!

சிட்னியில் ஆன்லைன் மூலம் 13 வயது சிறுவனுக்கு வலைவீசி அச்சிறுவனை பாலியல் வன்புணர்வு செய்த 40 வயது நபரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். Moud Ul Hasan Nuri என்ற 40 வயது நபர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் ஒன்லைன் மூலம் 13 வயது சிறுவனுடன் பழக்கம் ஏற்படுத்திக்கொண்டார்.

அச்சிறுவனுக்கு தவறான புகைப்படங்களை அனுப்பி மனதில் தவறான ஆசைகளை வளர்த்துள்ளார். இவரிடம் இருந்து வரும் புகைப்படங்களுக்கு, அச்சிறுவனம் பதில் புகைப்படம் அனுப்பியுள்ளான், மேலும் இச்சிறுவனின் வீட்டு முகவரி மற்றும் அவன் குறித்த தகவல்களை வாங்கிகொண்டார். இப்படி தொடர்ந்த இந்த சாட்டிங்கில், ஒரு நாள் சிறுவனின் வீட்டுக்கு சென்ற இந்நபர், அங்கு வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த தாய் வேகமாக ஓடிவந்தது தனது மகனை மீட்டுள்ளார்.

தாய் வந்தவுடன் இந்நபர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளார். இதுகுறித்து அச்சிறுவனின் தாய் பொலிசில் புகார் அளித்ததையடுத்து, பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அந்நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீன் கோரிய இந்நபரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை அடுத்து இவர் மீதான தண்டனை அறிவிக்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!