இரகசியப் பேச்சு நடக்கவில்லை – மறுக்கிறது மகிந்த அணி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், மகிந்த ராஜபக்ச இரகசியப் பேச்சு எதையும் நடத்தவில்லை என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

“மைத்திரிபால சிறிசேனவை மகிந்த ராஜபக்ச சந்தித்தார் என்ற செய்தியை, மகிந்த ராஜபக்சவும், எஸ்.பி.திசநாயக்கவும் மறுத்திருக்கின்றனர்.

இது தொடர்பாக, ஊடகங்களில் வெளியாகிய செய்திகள் முற்றிலும் தவறானவை.” என்று தெரிவித்துள்ளார்.

எனினும், மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து இன்று நடக்கவுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சிறப்புக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது என்று, அந்தக் கட்சியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!