சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார்- ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை

இடைக்கால அரசாங்கத்தை அமைக்கும் முயற்சிகளிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கமாட்டார் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறிசேன புத்திசாலித்தனமாக நடந்துகொள்வார் என நம்பிக்கை வெளியிட்டுள்ள ஹரீன் பெர்ணான்டே என நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் சிறிசேன அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டார் எனவும் தெரிவித்துள்ளார்

சிறிசேன அவ்வாறு செயற்படமாட்டார் என்பது குறித்து ஐக்கியதேசிய கட்சிக்கு நம்பிக்கையுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தோற்கடிக்கப்பட்ட அரசியல்வாதிகளை அமைச்சர்களாக நியமித்தமையே பல பிரச்சினைகளிற்கு காரணம் என அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமரிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவந்து தோல்வியடைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனினும் அவர்களின் இந்த முயற்சியும் தோல்வியடையும் எனவும் ஹரீன் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!