ரணில் இந்தியாவுக்கு; மைத்திரி சீனாவுக்கு – அடுத்தடுத்து பயணம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கும் பயணங்களை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரும் புதன்கிழமை இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மூன்று நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக இந்தியா செல்லும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , வரும் வியாழக்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, இந்தவாரம் போலந்துக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து கொழும்பு திரும்பிய பின்னர் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

அடுத்த மாதம் முதல் வாரத்தில் அவர் சீனாவுக்குப் பயணமாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்ட உரையின் போது அவர் நாடாளுமன்றத்துக்கு வர முடியாத நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!