விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையானார் கோத்தா!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார். டீ.ஏ. ராஜபக்ஷ சிலை மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட 7 பேருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காகவே அவர் விசேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!