இதிலும் சாதனை படைத்த நாடாளுமன்றம்! – கண்காணிக்க உத்தரவு

நாடாளுமன்றத்தில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக, முழுமையாக கண்காணிக்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இலங்கையிலேயே அதிகமாக உணவுகள் விரயமாக்கப்படுவது நாடாளுமன்றத்தில் தான் என கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தையடுத்தே சபாநாயகர் கருஜயசூரிய இந்த அறிவிப்பை விடுத்துள்ளதாக சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவு குறைவாக இருப்பதால், அவர்களுக்கான நாடாளுமன்ற உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்கள் தினமும் பெருமளவில் வீணடிக்கப்படுவதாக ஜனாதிபதி கூறியிருந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!