தேரர்களின் அழுத்தத்தாலேயே தமிழ் ஆளுநர் நியமனம் நீக்கம்!!

வடக்கு மாகா­ணத்­துக்கு தமி­ழர் ஒருவரை ஆளு­ந­ராக நிய­மிக்­கக்­கூ­டாது என்று முக்­கிய சில மகா­நா­யக்க தேரர்­கள் கடு­மை­யாக வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். அத னா­லேயே வடக்கு மாகாண ஆளு­ந­ராக தமி­ழர் நிய­மிக்­கப்­ப­ட­வில்லை. ரெஜி னோல்ட் குரே மீண்­டும் வடக்­குக்கு ஆளு­ ந­ராக அரச தலை­வ­ரால் நிய­மிக்­கப்­பட்­டார் என்று அறி­ய­மு­டி­கின்­றது.

வடக்கு தவிர்ந்த ஏனைய மாகா­ணங்­க­ளுக்­கான புதிய ஆளு­நர்­கள் கடந்த 12ஆம் திகதி அரச தலை­வர்­மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லை­யில் பத­வி­யேற்­ற­னர். ஏற்­க­னவே ஆளு­நர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கே இந்த இட­மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டன.

இதற்­க­மைய, வடக்கு மாகாண ஆளு­ந­ராக இருந்த ரெஜி­னோல்ட் குரேவை மத்­திய மாகா­ணத்­துக்கு மாற்­றி­விட்டு மேல் மாகாண ஆளு­ந­ராக இருந்த கே.சி.லோகேஸ்­வ­ரனை வடக்கு மாகாண ஆளு­ந­ராக நிய­மிப்­பதே அரச தலை­வ­ரின் முன்­னைய திட்­ட­மாக இருந்­தது.

எனி­னும், வடக்­கில் தமி­ழர் ஒரு­வர் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும் நிலை­யில், அந்­தப் பகு­திக்கு தமிழ் ஆளு­நர் ஒரு­வரை நிய­மித்­தால் அது ஏதே­னும் ஒரு விதத்­தில் பாத­க­மாக அமைந்­து­வி­டும் என்­றும், அத­னால் சிங்­க­ள­வ­ரொ­ரு­வரை ஆளு­ந­ராக நிய­மிக்­கு­மா­றும் மகா­நா­யக்க தேரர்­கள் சிலர் அரச தலை­வ­ரி­டம் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்.

இதன் கார­ண­மா­கவே அரச தலை­வர் தனது முடிவை இறு­தி­நே­ரத்­தில் மாற்றி, லோகேஸ்­வ­ரனை வட­மேல் மாகாண ஆளு­ந­ராக நிய­மித்­தார். வடக்­குக்கு வேறொ­ரு­வரை நிய­மித்­தால் நெருக்­கடி வரும் என்­ப­தால் ரெஜி­னோல்ட் குரே வுக்கு ஆளு­நர் பதவி மீண்­டும் வழங்­கப்­பட்­டது என­வும் அறி­ய­மு­டி­கின்­றது.
ஆளு­நர் குரே வடக்கு மாகாண ஆளு­ந­ராக மீண்­டும் கட­மை­க­ளை­யேற்­றுள்­ளார்.

வடக்கு மாகாண ஆளு­ந­ராக தமி­ழர் நிய­மிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று வடக்கு அர­சி­யல் தலை­வர்­கள் கோரி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!