மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்: – அதிர்ச்சித் தகவல்

மனிதர்கள் உண்ணும் உணவில் நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஒன்பது வெவ்வேறு வகை பிளாஸ்டிக் பொருட்களின் சிறிய துகள்கள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்ட ஒவ்வொரு மாதிரியிலும் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவின் மூலம் குடலுக்குள் செல்லும் பிளாஸ்டிக் துகள்கள் உடலின் நோயெதிர்ப்புக் கட்டமைப்பை பாதிப்பதோடு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ்களை விருத்தி செய்வதற்கும் வழிவகுக்கிறது. டூனா (Tuna), லொப்ஸ்டர் (Lobster) மற்றும் இறால் ஆகிய உணவுகளில் அதிக அளவிலான பிளாஸ்டிக் காணப்பட்டதாக முந்தைய ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. உலகில் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்கில் 5 சதவிகிதம் கடலில்போய் சேருகின்றது எனவும் அங்கு அது படிப்படியாக உடைந்து கடல்வாழ் உயிரினங்களின் உணவுடன் கலக்கிறது எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

உணவுகள் பொதிசெய்யப்பட்டு வரும் பக்கட்டுகளின் மூலமாகவோ உணவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் நுட்பங்கள் மூலமாகவோ பிளாஸ்டிக் உணவில் சேருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பிளாஸ்டிக் ஸ்ட்ரோ (Straw) மற்றும் கொட்டன் பட்ஸ் (Cotton Buds) ஆகியவற்றின் விநியோகம் மற்றும் விற்பனைக்கு அடுத்த வருடம் முதல் தடைவிதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!