கட்சி அரசியலினால் எமது நாடு கீழ் நோக்கிச் செல்கின்றது – கவலைப்படுகிறார் அர்ஜுன

நாம் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று நாட்டை நிர்வகிக்க முடியுமோ அப்போது தான் எமது தேசம் முழுமையாக அபிவிருத்தியடையும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கட்சி அரசியலினாலேயே எமது தேசம் கீழ்நிலைக்கு சென்றுள்ளது. தற்போது எமது அரசாங்கம் பிரதான இரு கட்சிகளின் இணக்கப்பாட்டிலேயே சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிறுசிறு பிரச்சினைகள் தோன்றுவது சாதாரண விடயமாகும். எனினும் இவற்றை நிவர்த்தி செய்யும் பொறுப்பு ஜனாதிபதியையும் பிரதமரையும் சாரும்.

இரண்டு கட்சியையும் ஒன்று சேர்த்து அரசாங்கத்தை நடத்தவே மக்கள் தமது ஆணையை வழங்கியிருந்தனர்.

இந்த மக்கள் ஆணைக்கு எதிராக சிலர் செயற்படுவாராயின் அது நாட்டின் அபிவிருத்தியை பாதிக்கும் செயலாகும்.

இதனை தடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியையும் பிரதமருக்கும் உரியதாகும்.

“கமே பன்சல கமட சவிய’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சமய நிகழ்வொன்றின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!