மைத்திரியுடன் குதூகலமாக கைகுலுக்கிய ராஜபக்ச சகோதரர்கள்

சிறிலங்கா பிரதமராக நேற்றிரவு மகிந்த ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து, ராஜபக்ச சகோதரர்கள், சிறிலங்கா அதிபருக்கு கைகுலுக்கி வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

நேற்றுமாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேனவுக்கு சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்கள் நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், பிரிந்தவர்கள் கூடி குதூகலத்துடன் காணப்பட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!