மகிந்­த­வின் ராஜ­தந்­தி­ர நகர்வு பயன­ளிக்­குமா?

ஐ. தே. கட்­சி­யின் புன­ர­மைப்பு ஏப்­ரல் 30ஆம் திக­திக்­குப் பிற்­போ­டப்­பட்­டுள் ளது’’ எனத் தெரி­விக்­கின்­றன அச்சு ஊட­கங்­கள். ‘‘சுதந்­தி­ரக் கட்சி, இந்­தக் கூட்டு அர­சில் இருந்து வெளி­யே­றி­விட வேண்­டும். அது குறித்த இறுதி முடிவு மேற்­கொள்ள கட்­சி­யின் மத்­திய செயற்­குழு மீண்­டும் கூட­வுள்­ளது.’’ என்­பது ஒரு சில பத்­தி­ரி­கை­க­ளது தலைப்­புச் செய்தி. இவற்­றை­விட, ‘ சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைச்­சர்­கள் அனை­வ­ரும் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிப்­பர்.’ என்ற தலைப்­புச் செய்­தி­யும் சில பத்­தி­ரி­கை­க­ளில் பிர­சு­ர­மா­கி­யி­ருந்தது.

இவை­யெல்­லா­வற்­றை­யும் விட சமூக வலைத்­த­ளங்­க­ளில், ‘‘ இணங்­கிக் கொள்­ளப்­பட்ட விதத்­தில் ஐ. தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­தில் மாற்­றம் செய்­யப்­ப­டாது விடின், தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக ஐ. தே. கட்­சி­யா­லேயே நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரப்­ப­டத்­தக்க ஆபத்து நில­வு­கி­றது ’’ என்ற செய்தி பகி­ரப்­பட்டு வந்­த­தை­யும் அவ­தா­னிக்க முடிந்­தது.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம் எதிர்பார்ப்பைநிறைவேற்றியதா?

மேற்­கண்ட செய்தித் தலை­யங்­கங்­கள் சக­ல­வற்­றி­லி­ருந்­தும் எம்­மால் எத­னைக் கிர­கிக்க முடி­கி­றது? மகிந்­த­வின் தலை­மை­யி­லான கூட்டு எதி­ரணி, நாடா­ளு­மன்­றுக்­குள் பற்ற வைத்த ‘நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம்’ என்ற குண்­டால், அவர்­க­ளால் எதிர்­பார்க்­கப்­பட்ட விளை­வு­களை ஏற்­ப­டுத்த முடிந்­ததா? அல்­லா­து வி­டில் அத­னால் எத்­த­கைய பலா­ப­லன் கிட்­டி­யது என்­ப­தையே அவை வௌிப்­ப­டுத்தி நிற்­கின்றன.

கடந்த பெப்­ர­வரி மாதம் 10ஆம் திக­தி­யன்று இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில், தமது எதிர்த்­த­ரப்­பி­னரை மூக்­கின் மேல் விரல் வைத்து ஆச்­ச­ரி­யப்­ப­ட­வைத்து, மகிந்­த­வின் ‘ தாம­ரை­மொட்டு ’ பெரு வெற்­றியை ஈட்­டிக் கொண்­டது. தொகுதி ரீதி­யில் 70 வீதத்­துக்­கும் அதி­க­மான வெற்­றியை மகிந்த அலை­யின் எழுச்­சியை உறு­திப்­ப­டுத்தி தாமரை மொட்­டுத் தரப்பு கைப்­பற்­றிக் கொண்­டது.

அது அந்­தத் தரப்­பின் பரப்­பு­ரைக்­குக் கிடைத்த வெற்றி என்­ப­தை­விட, மகிந்த என்ற அர­சி­யல் பாத்­தி­ரத்தை சுற்­றிச் சூழ்ந்து கைகோர்த்­துச் செயற்­பட்ட பொது­மக்­கள் ஆத­ர­வின் பலா­ப­லன் எனக் கொள்­வதே பொருத்­தம்.

உண்­மை­யில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தல் பெறு­பே­று­கள் வெளி­யான பின்­னர், ஐ. தே. கட்­சிக்கு இப்­போ­தைய தலை­வ­ருக்­குப் பதி­லாக வேறு தலை­வ­ரொ­ரு­வரே தேவைப்­பட்­டார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­யின் தரப்­பி­லி­ருந்து சுதந்­தி­ரக் கட்சி அமைச்­சர்­க­ளில் பலர் தாம் அர­சி­னின்­றும் வெளி­யே­றி­விட்­டால் தமது அர­சி­யல் எதிர்­கா­லம் நிச்­ச­ய­ மற்­ற­தாக ஆகி­வி­டு­மென்­பதை உணர்ந்து கொண்­ட­னர். மகிந்த தரப்­பின் 45 வீத வாக்­கு­க­ளை­யும், மைத்­திரி தரப்­பின் 13வீத வாக்­கு­க­ளை­யும் ஒன்று சேர்த்­தால் சிறு தேசி­யக் கட்­சி­க­ளது அழுத்­தங்­கள் எது­வு­மின்றி அதி­கா­ரத்­தைக் கைப்­பற்ற இய­லும் என்­பதை உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் வெளிப்­ப­டுத்­தி­ய­போது சம்­பந்­தன் தரப்பு மட்­டு­மன்றி, ஹக்­கீம் மற்­றும் றிசாட் பதி­யு­தீன் தரப்­புக்­க­ளும் குழம்­பிப்­போ­யின.

உள்­ளூ­ராட்­சி முடிவுகளால் பெரும்பாலானோர் ஏமாற்றம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமது கட்­சிக்கு பத்து வீதம் வரை­யான வாக்­கு­கள் கிட்­டு­மென்ற எதிர்­பார்ப்­பில் ‘கிரா­மப்­புற ஆத­ரவு ஜே. வி.பிக்கே’ எனக் கூறி­வந்த அனுர திஸ­நா­யக்க, வெறும் 6வீத வாக்­கு­களே கிட்­டி­யமை கண்டு அர­சி­யல் காற்று திசை­மாறி வீசி­யி­ருப்­பதை உணர்ந்து கொண்­டார். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்­கும் முன்­னைய தட­வை­க­ளை­விட இம்­முறை குறைந்த வீத வாக்­கு­களே கிட்­டி­யி­ருந்­தன.

மகிந்­த­வின் தரப்­புத் தவிர்ந்த ஏனைய அர­சி­யல் தரப்­புக்­க­ளுக்­கும் உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் பார­தூ­ர­மான காயங்­களோ, சிறு காயங்­களோ ஏற்­ப­டுத்­தின என்­பதே யதார்த்­தம்.

மத்­திய அர­சுக்கு எந்த விதத்­தி­ லும் அழுத்­தம் ஏற்­ப­டுத்த இய­லாத உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் இத்­த­கைய பெரும் வெற்­றியை பதிவு செய்த மகிந்த, ஏனைய தரப்­புக்­க­ளது அத்­த­கைய பின்­ன­டைவை நாடா­ளு­மன்­றத்­துள் வெளிப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யில் இறங்­கி­னார். அதன் பலா­ப­லனே தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை.

கூட்டு எதி­ர­ணித் தரப்­பி­னைச் சேர்ந்த சிலர் மத்­தி­யில், ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெறுமா என்­பது தொடர்­பில் நம்­பிக்­கை­யி­ருக்­க­வில்லை. ரணில் தொடர்ந்­தும் முத­ல­மைச்­சர் பத­வி­யில் தொடர்­வது எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் தமக்கு இலா­ப­க­ர­மாக அமை­யும் என்­பது அந்­தக் குழு­வி­ன­ரது நம்­பிக்­கை­யா­கும்.

ரணிலை நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்தின் மூலம் பத­வி­யி­லி­ருந்து அகற்­றி­னால், எதிர்­வ­ரும் அரச தலை­வர் தேர்­த­லில் ரணி­லைத் தோற்­க­டிப்­பது சிர­ம­மா­ன­தாக ஆகி­வி­டும் என்­பது அவர்களது நம்­பிக்­கை­யா­கும்.

ரணில் அவ­ரது தலைமை அமைச்சர் பத­வி­யி­லி­ருந்து நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டால், ஐ.தே. கட்­சிக்­கான மக்­கள் அனு­தா­பம் உயர்­வ­டை­யுமா? என்­ப­தற்கு இன்­றைய அர­சி­யல் போக்­குக் குறித்த தெளி­வான பார்­வை­யில்­லா­தவர்கள் ‘ஆம்’ என்றே பதில் அளிப்பர். ஆனால் உண்­மை­யில் ரணில் தமது பத­வியை இழக்க நேர்ந்­தால், ஐ. தே. கட்சி ஆபத்­தில் சிக்­கிக் கொள்­ளும். கட்­சி­யின் தலை­மைத்­து­வம் தொடர்­பான போட்டி உச்­ச­ம­டை­யும்.

ரவி­க­ருணா நாயக, சஜித் பிரே­ம­தாச, நவீன் திஸ­நா­யக ஆகி­யோர் ஐ.தே. கட்­சி­யின் தலை­மைத்­து­வத்­துக்­காக வெவ்­வேறு தரப்­புக்­க­ளாகப் பிரிந்து தம்­மி­டையே மோதிக் கொள்­வர். இதில் எந்த வித சந்­தே­க­மும் கிடை­யாது. அத்­த­கைய உட்­கட்­சிப் பூச­லொன்றை உரு­வாக்­கவே மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை முன்­னெ­டுக்கத் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டார்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை தமது பக்­கம் இணைக்க முடிந்­தமை மகிந்­த­வின் வெற்­றியே

தற்­போது ரணி­லுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் நாடா­ளு­மன்­றத்­தில் தோற்­க­டிக்­கப்­பட்டு சில நாள்­கள் கடந்து விட்­டுள்­ளன. 54 உறுப்­பி­னர்­கள் என்ற எண்­ணிக்­கை­யு­டன் இயங்கி வந்த கூட்டு எதி­ர­ணித்­த­ரப்­பில் மேலும் சுதந்­தி­ரக் கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 16 பேரை இணைத்­துக்­கொள்ள முடிந்­தமை மகிந்த, ரணி­லுக்கு எதி­ரான தமது நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத் திட்­டத் தின் மூலம் ஈட்­டிக் கொண்ட முத­ லா­வது வெற்­றி­யா­கும்.

அது 16 பேரை உள்­ளீர்த்­துக் கொண்­ட­து­டன் முடி­வுக்கு வரப்­போ­கும் ஒன்­றல்ல. தற்­போது கூட்டு அர­சி­னின்­றும் சுதந்­தி­ரக் கட்சி வெளி­யே­று­வது தொடர்­பான பேச்­சுக்­கள் சுதந்­தி­ரக் கட்­சி­யின் மத்­திய செயற்­கு­ழு­வில் முன்­னெ­டுக்­கப் பட்டு வரு­கின்­றன. அத்­து­டன் அமைச்­சர்­க­ளில் ஒரு தரப்­பி­னர் அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தைப் புறக்­க­ணிக்க ஆரம்­பித்து விட்­டுள்­ள­னர்.

ரணி­லுக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தால் கூட்டு அரசு குலை­யு­மா­னால், அது மகிந்த தரப்­புக்கு பெறு­ம­தி­யா­ன­தொரு வெற்­றி­யல்­லவா? அவ்­வி­தம் ஆகு­மா­னால், அதை­ய­டுத்து நிறு­வப்­ப­டும் ஐ. தே. கட்சி மற்­றும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இணைந்த அர­சில் 30க்கும் குறை­வான அமைச்­சர்­க­ளையே நிய­மிக்க இய­லும். அத்­த­கைய நிலை­யில் அமைச்­சுப் பத­வி­களை எதிர்­பார்த்­தி­ருந்து.

அவை கிட்­டா­த­தால் விரக்தி­யு­ றும் ஐ.தே. கட்­சி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் ஒரு தரப்­பி­னர், அதி­ருப்தி நிலை அடை­யக் கூடும். அதே சம­யம், த. தே. கூட்­ட­மைப்பு கோரி­வ­ரும் உள்­ளக சுய­நிர்­ணய நிர்­வா­ கத்தை உள்­ள­டக்­கிய அர­ச­மைப்­புத் திருத்­தத்தை சமர்ப்­பித்து நிறை­வேற்ற ஐ.தே. கட்சி அர­சால் இய­லாது போய்­வி­டும்.

அதே­வேளை மேற்­கு­லக நாடு­கள் மற்­றும் இந்­தி­யா­வின் தூத­ரக வட்­டா­ரங்­கள் எவ்­வா­றா­யி­னும் தேசிய அர­சாங்­கத்­தைத் தொடர்ந் தும் செயற்­பட வைக்­கு­மாறு அரச தலை­வர் மைத்­தி­ரிக்­கும், தலைமை அமைச்­சர் ரணி­லுக்­கும் அழுத்­தம் கொடுத்து வரு­ வது தத்­த­மது நாடு­க­ளது பூகோள அர­சி­யல் நலன் சார் தேவை­களை நிறை­வேற்­றிக் கொள்­ளும் நோக்கிலேயே ஆகும்.

சுதந்­தி­ரக் கட்­சித் தரப்­பி­னர் பொது­மக்­கள் முன்­ன­ணி­யு­டன்
இணை­வ­தன் மூலம் நாடா­ளு­மன்­றில் எதிர்க்­கட்சி அந்­தஸ்­து­டன்
செயற்­பட முடி­யும்

சுதந்­தி­ரக் கட்சி, நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட வேண்­டு­மா­னால், அரச தலை­வர் அர­சில் தனித்­துப் போக நேர்ந்து விடும். ஆனால், அவர் அனா­த­­­ர­வா­ன­வ­ராக, தலைமை அமைச்­ச­ருக்கு அடங்கி நடக்­கும் அரச தலை­வர் பாத்­தி­ரத்­தைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்­குப் பதி­லாக, தற்­போது தலைமை அமைச்­ச­ரு­டன் தாம் நடத்தி வரும் அர­சின் பனிப்­போ­ரைத் தீவி­ரப்­ப­டுத்­து­ வார் என்றே கருத வேண்­டி­யுள்­ளது.

சுதந்­தி­ரக் கட்சி நாடா­ளு­மன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­ப­டு­வ­தென்­ப­தன் அர்த்­தம், அது மகிந்­த­வின் தலை­மை­யி­லான பொது மக்­கள் முன்­ன­ணி­யு­டன் அர­சி­யல் ரீதி­யில் இணைந்து கொள்­வ­தா­கும். அது உட­ன­டி­யாக இடம் பெறாது விட்­டா­லும், காலப் போக்­கில் அவ்­வி­தம் நடந்­தே­யா­கும்.

மைத்­தி­ரி­பால தரப்­பின் 13வீதம் மற்­றும் மகிந்த தரப்­பின் 45 வீதம் என்­ப­வற்றை ஒன்­றி­ணைப்­ப­தன் மூலம் சிறு இன­வா­தக் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு உட்­ப­டா­மல், புதிய அர­சொன்றை மேற்­கு­றித்த தரப்­பால் உரு­வாக்க வாய்ப்­ப­மை­யும்.

அதே சம­யம் மகிந்­த­வின் ‘தாமரை மொட்டு’ தரப்­பி­ன­ரில் ஒரு சிலர், இத்­த­கைய இணைவை விரும்­பு­வ­தா­கத்­தோன்­ற­வில்லை. சிறு இன­வாத அர­சி­யல் கட்­சி­க­ளது நியா­ய­மற்ற அழுத்­தங்­க­ளுக்கு வளைந்து கொடுத்துச் செயற்படும் ஒரு அரச நிர்­வா­கமே அவர்­க­ளது எதிர்­பார்ப்­பா­கும். இலங்­கை­யின் அர­சி­யலை ஆட்­டம் காண­வைத்து, நலி­வு­ப­ட­வைக்க இலக்கு வைத்­துள்ள வெளி­நா­டு­க­ளது தூத­ரங்­க­ளது விருப்­ப­மும் அதுவே.

பெப்­ர­வரி 10ஆம் நாளின் மக்­கள் எழுச்­சி­யின் பலா­ப­ல­னாக தலைமை அமைச்­ச­ருக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கொண்டு வரும் மகிந்த தரப்­பின் முடிவு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது.

அதில் மகிந்த தோல்­வி­யுற்ற போதி­லும், அர­சி­யல் ரீதி­யில் அது அவ­ருக்கு வெற்­றியே. அந்த நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் கார­ண­மா­கவே சுதந்­தி­ரக்­கட்­சி­ யி­லி­ருந்து 16 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளைத் தமது தரப்­புக்கு மகிந்­த­வால் இழுத்­துக்­கொள்ள முடிந்­தது.

தற்­போது மகிந்­த­வின் இந்­தக் கூட்டு எதி­ரணி மேலும் ஒரு­படி முன்­னேறி சுதந்­தி­ரக் கட்­சி­யின் ஏனைய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளை­யும் தமது தரப்­புக்கு இழுத்­துக் கொள்­ளும் முயற்­சி ­யில் தீவிர கவ­னம் செலுத்திச் செயற்­பட வேண்­டும். அதுவே இன்­றைய தமது முக்­கிய முயற்­சி­யா­கக் கொண்டு மகிந்த தரப்பு செயற்­பட வேண்­டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!