5 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்தியாவின் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் நிபந்தனையுடன் நீதிமன்றத்தால் விடுதலைசெய்யப்பட்டனர்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் முன்னிலையில் மீனவர்களின் வழக்கு விசாரணைக்கு வந்தது அப்போது, மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த நீதிபதி விசைப்படகின் உரிமையாளரை எதிர்வரும் நவம்பர் மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உத்தரவிட்டார். தவறும் பட்சத்தில் விசைப்படகு அரசுடமையாக்கப்படும் எனவும் உத்தரவிட்டார்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாட்களில் இந்தியா திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!