ஆளுநர் மாற்றம் குறித்து எனக்குத் தெரியாது! -ரெஜினோல்ட் குரே

வட மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு இதுவரையில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரான ரெஜினோல்ட் கூரே மாற்றப்பட்டு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

ஆளுநரின் செயலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பின் போது ஆளுநர் மாற்றம் தொடர்பில் ரெஜினோல்ட் குரேயிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்குப் பதிலளித்த ரெஜினோல்ட் குரே மாகாணத்தின் ஆளுநர் மாற்றம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும், மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட்டால் தான் இங்கிருந்து செல்வதற்குத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை ஊடகவியலாளர் சந்திப்புக்கு ஆளுநர் செயலகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவ்வாறான ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் அவர் கூறினார்.

தான் தீபாவளி வாழ்த்துக்களை மாத்திரம் சொல்ல உள்ளதாக கூறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு வேறு விடயங்கள் தொடர்பில் பேசவோ அல்லது கேள்விகள் எழுப்பப்படுவதையோ தவிர்த்துக் கொண்டு உடனடியாக அச் சந்திப்பையும் முடித்துக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!