மஹிந்தவின் நியமனம் தமிழர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து! – ஒன்றாரியோ பாராளுமன்ற உறுப்பினர் விஜய்

பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளது, இலங்கையில் உள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தானது என ஒன்றாரியோ பாராளுமன்றத்தின், ஸ்காபுரோ ரூச் பார்க் தொகுதியில் கொன்செர்வேர்ட்டிவ் கட்சி உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி போரின் போது போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளுக்கு காரணமாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ எந்தவொரு நீதியம் இல்லாமல் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் நியமனமானது இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு மிகவும் ஆபத்தான ஒன்று” என விஜய் தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!