முன்னாள் போராளியை விசாரணைக்கு அழைக்கிறது ரிஐடி!

KONICA MINOLTA DIGITAL CAMERA
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவருக்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 05ஆம் திகதி அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அவர் சமூகமளிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.முல்லைத்தீவு-புதியபூமி வீதி தேவிபுரத்தில் வசிக்கும் தம்பையா லோகேஸ்வரன் என்ற முன்னாள் போராளிக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு 2ஆம் மாடியில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரனைப்பரிவு, இலக்கம் ஒன்று பொறுப்பாதிகாரியை எதிர்வரும் 5ஆம் திகதி சந்திக்கும்மாறு பயங்கரவாத விசாரணைப்பிரிவு கிளிநொச்சி பொறுப்பதிகாரியினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!