நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமையின் கீழ் அரசதலைவரின் அதிகாரம் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டுமே அன்றி அதனை இல்லாமல் செய்யக் கூடாது. அவ்வாறு குறைப்பது நாட்டை அழிவுக்கு இட்டுச் செல்லும்.
இவ்வாறு முன்னாள் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
மக்கள் விடுதலை முன்னணியால் அரசதலைவரின் நிறைவேற்று அதிகாரத்தை நீக்கும் வகையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரவுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதே தீர்மானத்தைத் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அரச சார்பற்ற அமைப்புக்களும் முன்வைத்து வருகின்றன. இதற்குக் கூட்டு எதிர்க் கட்சியும் தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளன என்பதே.
அரசியல் ரீதியில் நாட்டைப் பலப்படுத்த வேண்டுமானால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் முறைமை இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!