எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து விரட்டியடிக்கத் தீவிரமாக முயற்சிக்கப் போவதாக கூட்டு எதி ரணி தெரிவித்திருக்கிறது.
பதவியில் இருந்து சம்பந்தன் தானாகவே விலகிச் செல்வதற்கான அழுத்தங்களை அனைத்து வழிகளிலும் கொடுப் பதற்கு தமது தரப்பு முடிவு செய்துள்ளதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார்.
‘‘எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதி ராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில்அர்த்தமில்லை. மாறாக அவராகவே பதவி விலகுவதே சிறந்ததாக அமையும் . ஆனால் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவி யிலிருந்து நீக்காவிட்டால் சபாநாயக ருக்கு எதிராகச் செயற்படுவதற்கும் கூட்டு எதிரணி நடவடிக்கை எடுத்து வருகின்றது’’ என்றார் அவர்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோதே தினேஷ் குணவர்த்தன இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது:
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பதவி விலகுவதற்கான அழுத்தங்களைப் கொடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் துரித கதியில் முன்னெடுப்பதற்குக் கூட்டு எதிரணி தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டது.
ஆனால் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது அர்த்தமற்றது என்பதை நாங்கள் உணர்கின்றோம்.
எனவே எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் தானாகவே பதவி விலகுவதற்கான அழுத்தங்களைக் கொடுப்பதே பொருத்தமானதாக அமையும்.
அதற்காக நாங்கள் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராகப் பல்வேறு வழிகளிலும் செயற்படுவதற்குத் தீர்மானித்துள்ளோம். அவர் பதவிவிலகும் வரை நாங்கள் அழுத்தம் கொடுப்போம்.
நாடாளுமன்றில் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகரே நியமித்திருக்கின்றார்.
பெரும்பான்மைப் பலம் எம்மிடம் இருக்கும்போது சம்பந்தனை எதிர்க் கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கவேண்டியது சபாநாயகரின் கடமை. ஆனால் சபாநாயகர் அந்தக் கடமையைச் செய்யாமல் இருக்கின்றார். அவர் இப்படியே செயற்படுவாரானால் அவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க க் கூட்டு எதிரணி தயங்காது – என்றார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!