தமிழ் மக்கள் மஹிந்தவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் : சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை

தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைவதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகியுள்ளது. இதனை தமிழ் மக்கள் சரியாகப் புரிந்துகொண்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் கலாநிதி சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்கத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் தமிழ், சிங்கள மக்களுக்கிடையில் ஒற்றுமையும் சமத்துவமும் ஏற்படக்கூடிய முக்கிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. கடந்த 70 வருடங்களுக்கு முன்னர் செல்வநாயகம் முன்வைத்த உடன்படிக்கை முறிவடைந்ததன் காரணமாகவே ‘புலிகள்’ உருவாகினார்கள்.

இதனால் இடம்பெற்ற கசப்பான உணர்வுகளை நாம் மறக்க வேண்டும். தற்போது உருவாகியுள்ள சிறப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்காக தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களைப் பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!