ஜனாதிபதியின் தீர்மானத்தை மீற சபாநாயகருக்கு அதிகாரம் கிடையாது – முன்னாள் சபாநாயகர்

அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றது.

எனவே தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!