ஆண் குழந்தை பிறக்காததால் மனைவியை எரித்துக் கொன்ற கணவன்!!

ஆண் குழந்தை பிறக்காததால் தனது மனைவியை கணவன் தீவைத்து கொளுத்தியசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச்ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே பல்சூந்த் பகுதியில் நடந்துள்ளது. கோபால் கிருஷ்ணன் ரனேஜா. இவரது மனைவி தேவயானி(29). இவர்களுக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

இருப்பினும் ஆண் குழந்தை வேண்டும் என்று, கோபாலும், அவரது குடும்பத்தாரும் தேவயானியைத் தொடர்ந்து குறைகூறி வந்துள்ளனர். மேலும் வேறு திருமணம் செய்து வைத்து விடுவோம் என்றும் அச்சுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கோபாலும், அவரது குடும்பத்தாரும் தேவயானி மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீவைத்துள்ளனர். உடனே ஆரம்ப சுகாதார நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் ஜோத்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையில் காஸ் கசிவு காரணமாக, தேவயானி உயிரிழந்ததாக கோபால் வீட்டார் பொலிஸாரிடம் தெரிவித்தனர். ஆனால் எரித்துக் கொல்லப்பட்டதாக தேவயானி தந்தை வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து கோபால், தந்தை லிச்சி ராம் ரனேஜா, தாய் ருக்பான் தேவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோபால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.