அதிபர், ஆசிரியர், மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் துப்பாக்கி முனையில் கடத்தல்

பாடசாலை அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட 79 பேர் துப்பாக்கி முனையில் ஆயுததாரிகளால் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் கமரூனில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கமரூன் நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் இயக்கத்தினர் ஆயுதமேந்தி போராடி வருகின்றனர்.

இந்நிலையில், கமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பாடசாலையொன்றுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த நபர்கள், அப் பாடசாலையில் படித்து வந்த 10 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவர்கள் மற்றும் பாடசாலையின் அதிபர், ஆசிரியர், சாரதி உள்ளிட்ட 79 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், இவ்வாறு கடத்திச்சென்ற ஆயுததாரிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட ஆயுததாரிகளைத் தேடும் நடவடிக்கையில், கமரூன் அரசாங்கம் இறங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!