கிளிநொச்சியில் நேற்று மாலை 07.20 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலியாகினர். யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனமும், பரந்தன் பகுதியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களும் பலியாகியுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்ளில் ஒருவர், கிளிநொச்சி செல்வநகரைச் சேர்ந்த செல்வராஜா கஜீபன் (வயது 18) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். மற்றைய இளைஞன் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!