19ஆம் திகதி வேட்புமனுத் தாக்கல் ஆரம்பம்! ஜனவரி 05இல் தேர்தல் –

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகிறது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு வெளியிட்ட வர்த்தமான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது-

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் அரசியல் யாப்பின் 33 ஆவது உறுப்புரை 2(இ) உப உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைவாக இன்று நள்ளிரவு முதல் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவதுடன் 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அன்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்படும். இதற்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும் திகதி 2019 ஜனவரி மாதம் 05 ஆம் திகதியாகும்.

அத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால எல்லை 2018 நவம்பர் மாதம் 19 ஆம் திகதி தொடக்கம் 2018 நவம்பர் மாதம் 26 ஆம் திகதியன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!