2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுபகளின் அடிப்படையில் நாடு முழு வதிலும் 7 ஆயிரத்து 308பேர் சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர். வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 623பேர் சகல பாடங்களிலும் சித்திய டையத் தவறியுள்ளனர்.
இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 3.46 சதவீதமாகும். தேசிய ரீதியில், சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியவர்கள் பட்டியலில் வடக்கு மாகாணமே முதலிடத்தில் உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 339பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 127பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 84பேரும், வவுனியா மாவட்டத்தில் 47பேரும், மன்னார் மாவட்டத்தில் 26பேரும், சகல பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!