சதியில் வீழ்ந்தோம்!

மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட தாங்கள் அனைவரும் எதிரிகளின் சதி வலையில் மீளமுடியாமல் தவிப்பதாக கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுக்கூட்டத்திலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“நாம் வேண்டாம் என்று கூறிய போதும், சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செய்த செயலினால் சில ஆண்டுகளாக கடின உழைப்பில் உருவாக்கிய தாமரை மொட்டு சின்னமும் அழிந்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முடிந்தது. அரசாங்கமும் இல்லை, நாமும் முடிந்தோம். நாம் அனைவரும் எதிரியின் சதி வலையில் சிக்கி விட்டோம். இந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சில தலைவர்கள் பொறுப்பு சொல்ல வேண்டும்” என்று கடும் தொனியில் குமார வெல்கம திட்டித்தீர்த்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!