அமைச்சரவையில் இனி பிரதமர், அமைச்சர்கள் இல்லை:கரு

பாராளுமன்றத்தில் பெருபான்மையை இழந்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையோ அல்லது அமைச்சர்களையோ ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பிரதமரோ அமைச்சரவையோ இல்லை என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அனுப்பிய கடிதத்திற்கு பதில் வழங்க எனக்கு கடமை உள்ளதாகவும். அதற்கு தனக்கு உரிமை இருப்பதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!