காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் – அப்ரிடி

காஷ்மீர் பாகிஸ்தானுக்கு வேண்டாம் எனத் தெரிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் ஷகித் அப்ரிடி, காஷ்மீர் இந்தியாவுக்கும் வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றதிலிருந்து, காஷ்மீர் பிரச்சினை தொடர்பான தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்க முடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது.

மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. எல்லை மீறி இந்தியாவில் தாக்குதல் நடத்துவதும், இந்தியா பதிலடி கொடுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.

இந் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் செயற்பாடு அப்ரிடி மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,

பாகிஸ்தான் காஷ்மீரைக் கேட்கவில்லை. இந்தியாவுக்கும் காஷ்மீரைக் கொடுக்க வேண்டாம். காஷ்மீர் மாநிலத்தைச் சுதந்திரமாக செயல்பட விடுங்கள். அவ்வாறு சுதந்திரமாக செயல்பட்டால் குறைந்தபட்சம் மனிதநேயம் உயிருடன் இருக்கும்.

4 மாநிலங்களைக் கூட பாகிஸ்தானால் நிர்வகிக்க முடியாது. பாகிஸ்தானுக்கு காஷ்மீர் வேண்டாம். அங்கு மிகப்பெரிய பிரச்சினையே மனிதநேயம்தான்.

மக்கள் நாள்தோறும் உயிரிழந்தவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைக்குரியதே எனவும் குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஷாகித் அப்பிரிடி கருத்துத் தெரிவிப்பது இது முதல் முறை அல்ல. இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் கூட கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!