நாடாளுமன்றைக் கூட்டி பிரச்சினைக்குத் தீர்வு காண மல்வத்த மகாநாயக்கர் மைத்திரிக்கு அழுத்தம்

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நாட்டில் தற்போதுள்ள அரசியல் உறுதியற்ற நிலையை முடிவுக்குக் கொண்டு வருமாறு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், மல்வத்த பீடத்தின் மகாநாயக்க தேரர், வண.திப்பொட்டுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், சிறிலங்கா அதிபருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார்.

அரசியலமைப்பு மற்றும் நெறிமுறைகளுக்கு அமைய அதிபரும், நாடாளுமன்றமும், தீர்வுகளை கொண்டு வர முடியும் என்றும் நம்புவதாகவும் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் தெரிவித்துள்ளார்.

நாட்டை மேலும் வீழ்ச்சியில் இருந்து பாதுகாக்க உடனடியாக அவசர நடவடிக்கையை எடுக்குமாறும் அவர் சிறிலங்கா அதிபரிடம் கோரியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!