மஹிந்தவுக்கு பதிலடி!

பாராளுமன்றத்தில் இன்று நிலவிய சூழ்நிலைக்கு சபாநாயகர் கரு ஜெயசூரியவே முக்கிய காரணம் என மகிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வ முகநூலில் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் மக்களை மதிக்கும் ஸ்திரதன்மை வாய்ந்த அரசாங்கமொன்று அமைவதை உறுதி செய்வதற்காக பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்ச கூறியிருந்தார்.

இதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சா டி சில்வா பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே உரிய வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு அனுமதிக்காத மகிந்த ராஜபக்ச தரப்பிடமிருந்து சுதந்திரமான நீதியான தேர்தலை எதிர்பார்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!