ஓடும் பஸ்ஸில் தீ ; 42 பேர் பலி

சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்தில் நிகழ்ந்த பஸ் விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்தனர்.

சிம்பாப்வே நாட்டின் மிட்லான்ட்ஸ் மாகாணத்திற்குட்பட்ட ஸ்விஷாவானே பகுதியில் இருந்து தென்னாப்பிரிக்காவில் அமைந்துள்ள முசினா என்ற பகுதியை நோக்கி சுமார் 70 பேர் ஒரு பஸ்ஸில் சென்று கொண்டிருந்தனர்.

புலாவயோ- பெய்ட்பிரிட்ஜ் சாலை வழியாக நேற்றிரவு சென்றபோது அந்த பஸ் திடீரென்று தீபிடித்து எரிய துவங்கியது. ஓடும் பஸ்ஸில் ஏற்பட்ட இந்த விபத்தில் சிக்கிய 42 பேர் உயிரிழந்ததோடு 20 க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதே மாகாணத்தில் உள்ள ருசாப்பே என்னுமிடத்தில் கடந்த வாரம் இரு பஸ்கள் மோதிகொண்ட விபத்தில் 50 பேர் பரிதாபமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!