சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாள் நேற்றிரவு அதிபர் செயலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் ஏற்பாட்டிலேயே இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
நேற்று மாலை அதிபர் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெற்றிகரமாக முடிந்த பின்னரே இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளதாக, அரசாங்கத் தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், நேற்றைய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவுகள் ஏதுமின்றி முடிந்ததாக, அரச தரப்பு அமைச்சர்கள் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!