தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா நல்லூரில் உள்ள முகாமையாளர் சங்கத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அரசின் மாற்றங்களால் அவை நீதிமன்றத்தின் ஊடாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மாற்றமடையும் போது அதில் சம்பந்தப்பட்ட நாடான இந்தியாவும் அக்கறை காட்டவில்லை. வடக்கு – கிழக்கு மாகாணம் ஒப்பந்தத்தின் பிரகாரம் இல்லாது பிரிந்தது.
வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கபட்டதன் விளைவாக தற்போது கிழக்கு மாகாணம் பெரும்பான்மை சமூகத்தின் பிடிக்குள் சிக்கி விட்டது. இப்போது வடக்கு மாகாணத்தையும் குறிவைத்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சிங்கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை மாற்றவில்லை.அவர்களின் திட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
நாம் ஆரம்ப காலத்தில் இருந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் வரை இந்தியாவையே நம்பினோம்.
7 கோடி தமிழ் மக்களை கொண்ட தமிழ் நாட்டுக்கு தனியான அரசு அமைக்கப்பட்டு அதிகார பரவலாக்கம் வழங்கபட்டுள்ளது. ஆனால் இங்குள்ள எமக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு காரணிகளுக்காக செய்துகொள்ளப்பட்டது. அதில் ஒன்று எமது இனத்தின் பிரச்சனைக்குத் ஒரு தீர்வினை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவுமே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஆனால் இன்றோ தென்னிலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இதே ஆதிக்கம் தமிழ் தரப்பிடம் இருந்து வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பறிபோனால் இங்கும் ஏற்படும். எனவே எமது மாகாணங்கள் பறிபோனால் எமக்கு மட்டும் பாதிப்பல்ல. அது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் – என்றார்.
தமிழரின் தாயக பூமியான, வடக்கு– – கிழக்கு மாகாணம் தமிழரின் கையை விட்டுச் சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக் குறியாகும். இந்தப் பேராபத்தைக் கருத்திற் கொண்டு – கரிசனையில் எடுத்து இந்திய அரசு தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றங்களை உடனடியாகக் கொண்டு வரவேண்டும் என்று ஈபிஆர்எல்எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
இந்தியப் பத்திரிகையாளர் தி.ராமகிருஸ்ணன் எழுதிய ‘ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்’ என்ற நூல் அறிமுக விழா நல்லூரில் உள்ள முகாமையாளர் சங்கத்தில் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாகவே வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டது. பின்னர் காலப்போக்கில் அரசின் மாற்றங்களால் அவை நீதிமன்றத்தின் ஊடாகப் பிரிக்கப்பட்டது. இரண்டு நாடுகளுக்கு இடையிலே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மாற்றமடையும் போது அதில் சம்பந்தப்பட்ட நாடான இந்தியாவும் அக்கறை காட்டவில்லை. வடக்கு – கிழக்கு மாகாணம் ஒப்பந்தத்தின் பிரகாரம் இல்லாது பிரிந்தது.
வடக்கு – கிழக்கு மாகாணம் பிரிக்கபட்டதன் விளைவாக தற்போது கிழக்கு மாகாணம் பெரும்பான்மை சமூகத்தின் பிடிக்குள் சிக்கி விட்டது. இப்போது வடக்கு மாகாணத்தையும் குறிவைத்து திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. சிங்கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்றைய காலத்தில் இருந்து இன்று வரை மாற்றவில்லை.அவர்களின் திட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றது.
நாம் ஆரம்ப காலத்தில் இருந்து இறுதியாக முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படும் வரை இந்தியாவையே நம்பினோம்.
7 கோடி தமிழ் மக்களை கொண்ட தமிழ் நாட்டுக்கு தனியான அரசு அமைக்கப்பட்டு அதிகார பரவலாக்கம் வழங்கபட்டுள்ளது. ஆனால் இங்குள்ள எமக்கு என்ன வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தம் இரண்டு காரணிகளுக்காக செய்துகொள்ளப்பட்டது. அதில் ஒன்று எமது இனத்தின் பிரச்சனைக்குத் ஒரு தீர்வினை கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தியாவின் பாதுகாப்புக்காகவுமே இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.
ஆனால் இன்றோ தென்னிலங்கையில் சீனாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது. இதே ஆதிக்கம் தமிழ் தரப்பிடம் இருந்து வடக்கு – கிழக்கு மாகாணங்கள் பறிபோனால் இங்கும் ஏற்படும். எனவே எமது மாகாணங்கள் பறிபோனால் எமக்கு மட்டும் பாதிப்பல்ல. அது இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் தமது அயலுறவுக் கொள்கையில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும் – என்றார்.