தமி­ழ­ரின் கை தவ­றிப் போனால் இந்­தி­யா­வின் பாது­காப்புக்கு ஆபத்து

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா நல்­லூ­ரில் உள்ள முகா­மை­யா­ளர் சங்­கத்­தில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடா­கவே வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட்­டது. பின்­னர் காலப்­போக்­கில் அர­சின் மாற்­றங்­க­ளால் அவை நீதி­மன்­றத்­தின் ஊடா­கப் பிரிக்­கப்­பட்­டது. இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யிலே செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் மாற்­ற­ம­டை­யும் போது அதில் சம்­பந்­தப்­பட்ட நாடான இந்­தி­யா­வும் அக்­கறை காட்­ட­வில்லை. வடக்கு – கிழக்கு மாகா­ணம் ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் இல்­லாது பிரிந்­தது.

வடக்கு – கிழக்கு மாகா­ணம் பிரிக்­க­பட்­ட­தன் விளை­வாக தற்­போது கிழக்கு மாகா­ணம் பெரும்­பான்மை சமூ­கத்­தின் பிடிக்­குள் சிக்கி விட்­டது. இப்­போது வடக்கு மாகா­ணத்­தை­யும் குறி­வைத்து திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ள­பட்டு வரு­கின்­றன. சிங்­கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்­றைய காலத்­தில் இருந்து இன்று வரை மாற்­ற­வில்லை.அவர்­க­ளின் திட்­டங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.

நாம் ஆரம்ப காலத்­தில் இருந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­கா­லில் இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் கொல்­லப்­ப­டும் வரை இந்­தி­யா­வையே நம்­பி­னோம்.
7 கோடி தமிழ் மக்­களை கொண்ட தமிழ் நாட்­டுக்கு தனி­யான அரசு அமைக்­கப்­பட்டு அதி­கார பர­வ­லாக்­கம் வழங்­க­பட்­டுள்­ளது. ஆனால் இங்­குள்ள எமக்கு என்ன வழங்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் இரண்டு கார­ணி­க­ளுக்­காக செய்­து­கொள்­ளப்­பட்­டது. அதில் ஒன்று எமது இனத்­தின் பிரச்­ச­னைக்­குத் ஒரு தீர்­வினை கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கா­க­வுமே இந்த ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­டது.

ஆனால் இன்றோ தென்­னி­லங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கம் மேலோங்­கி­யுள்­ளது. இதே ஆதிக்­கம் தமிழ் தரப்­பி­டம் இருந்து வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் பறி­போ­னால் இங்­கும் ஏற்­ப­டும். எனவே எமது மாகா­ணங்­கள் பறி­போ­னால் எமக்கு மட்­டும் பாதிப்­பல்ல. அது இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கும் அச்­சு­றுத்­த­லாக அமை­யும் என்­பதை இந்­திய அரசு புரிந்து கொள்ள வேண்­டும். அவர்­கள் தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றத்தை கொண்டு வர­வேண்­டும் – என்­றார்.

தமி­ழ­ரின் தாயக பூமி­யான, வடக்கு– – கிழக்கு மாகா­ணம் தமி­ழ­ரின் கையை விட்­டுச் சென்­றால் இந்­தி­யா­வின் பாது­காப்பு கேள்­விக் குறி­யா­கும். இந்­தப் பேரா­பத்தைக் கருத்­திற் கொண்டு – கரி­ச­னை­யில் எடுத்து இந்­திய அரசு தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றங்­களை உட­ன­டி­யா­கக் கொண்டு வர­வேண்­டும் என்று ஈபி­ஆர்­எல்­எப் அமைப்­பின் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் தெரி­வித்­தார்.

இந்­தி­யப் பத்­தி­ரி­கை­யா­ளர் தி.ராம­கி­ருஸ்­ணன் எழு­திய ‘ஓர் இனப்­பி­ரச்­சி­னை­யும் ஓர் ஒப்­பந்­த­மும்’ என்ற நூல் அறி­முக விழா நல்­லூ­ரில் உள்ள முகா­மை­யா­ளர் சங்­கத்­தில் வடக்கு மாகாண அவைத்­த­லை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம் தலை­மை­யில் நேற்று மாலை இடம்­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­றும் போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இலங்கை – இந்­திய ஒப்­பந்­தத்­தின் ஊடா­கவே வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் இணைக்­கப்­பட்­டது. பின்­னர் காலப்­போக்­கில் அர­சின் மாற்­றங்­க­ளால் அவை நீதி­மன்­றத்­தின் ஊடா­கப் பிரிக்­கப்­பட்­டது. இரண்டு நாடு­க­ளுக்கு இடை­யிலே செய்து கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் மாற்­ற­ம­டை­யும் போது அதில் சம்­பந்­தப்­பட்ட நாடான இந்­தி­யா­வும் அக்­கறை காட்­ட­வில்லை. வடக்கு – கிழக்கு மாகா­ணம் ஒப்­பந்­தத்­தின் பிர­கா­ரம் இல்­லாது பிரிந்­தது.

வடக்கு – கிழக்கு மாகா­ணம் பிரிக்­க­பட்­ட­தன் விளை­வாக தற்­போது கிழக்கு மாகா­ணம் பெரும்­பான்மை சமூ­கத்­தின் பிடிக்­குள் சிக்கி விட்­டது. இப்­போது வடக்கு மாகா­ணத்­தை­யும் குறி­வைத்து திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ள­பட்டு வரு­கின்­றன. சிங்­கள அரசு தனது நிகழ்ச்சி நிரலை அன்­றைய காலத்­தில் இருந்து இன்று வரை மாற்­ற­வில்லை.அவர்­க­ளின் திட்­டங்­கள் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது.

நாம் ஆரம்ப காலத்­தில் இருந்து இறு­தி­யாக முள்­ளி­வாய்க்­கா­லில் இலட்­சக்­க­ணக்­கான மக்­கள் கொல்­லப்­ப­டும் வரை இந்­தி­யா­வையே நம்­பி­னோம்.
7 கோடி தமிழ் மக்­களை கொண்ட தமிழ் நாட்­டுக்கு தனி­யான அரசு அமைக்­கப்­பட்டு அதி­கார பர­வ­லாக்­கம் வழங்­க­பட்­டுள்­ளது. ஆனால் இங்­குள்ள எமக்கு என்ன வழங்­கப்­பட்­டுள்­ளது.

இலங்கை இந்­திய ஒப்­பந்­தம் இரண்டு கார­ணி­க­ளுக்­காக செய்­து­கொள்­ளப்­பட்­டது. அதில் ஒன்று எமது இனத்­தின் பிரச்­ச­னைக்­குத் ஒரு தீர்­வினை கொடுக்க வேண்­டும் என்­ப­தற்­கா­க­வும் இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கா­க­வுமே இந்த ஒப்­பந்­தம் செய்து கொள்­ளப்­பட்­டது.

ஆனால் இன்றோ தென்­னி­லங்­கை­யில் சீனா­வின் ஆதிக்­கம் மேலோங்­கி­யுள்­ளது. இதே ஆதிக்­கம் தமிழ் தரப்­பி­டம் இருந்து வடக்கு – கிழக்கு மாகா­ணங்­கள் பறி­போ­னால் இங்­கும் ஏற்­ப­டும். எனவே எமது மாகா­ணங்­கள் பறி­போ­னால் எமக்கு மட்­டும் பாதிப்­பல்ல. அது இந்­தி­யா­வின் பாது­காப்­புக்­கும் அச்­சு­றுத்­த­லாக அமை­யும் என்­பதை இந்­திய அரசு புரிந்து கொள்ள வேண்­டும். அவர்­கள் தமது அய­லு­ற­வுக் கொள்­கை­யில் மாற்­றத்தை கொண்டு வர­வேண்­டும் – என்­றார்.