மஹிந்த பொறுமை காத்திருக்க வேண்டும் ! அரசியல் ரீதியில் தவறிழைத்து விட்டார் – குமார வெல்கம

இடைக்கால அரசாங்கத்தின் பிரதமர் பதவியை பொறுப்பேற்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியல் ரீதியில் பாரிய தவறு இழைத்துவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

இதேவேளை, சற்று பொறுத்திருந்தால் நாட்டு மக்களே ஜனநாயக ரீதியில் ஆட்சி அதிகாரத்தினை அவருக்கே மீண்டும் கையளித்திருப்பார்கள் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக செயற்பட்டவர்கள் இன்று தம்மைத் தாமே ஆளும் தரப்பினர் என்று குறிப்பிட்டுக்கொள்ள எவ்வித தார்மீக உரிமையும் கிடையாது. ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் சற்று விட்டுக் கொடுப்புடன் செயற்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்