இன்றைய பாராளுமன்ற அமர்வில் அமைச்சுக்களின் செலவினங்களை வெட்டும் தீர்மானம்!

பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடவுள்ளது. பாராளுமன்றத்தில் பொது மக்கள் கலரியும், விசேட அதிதிகளுக்கான கலரியும் இன்றும் மூடப்படும் என்று பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர்கள் தெரிவித்துள்ளனர்.இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்பது குறித்து இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ள கட்சிக் கூட்டத்தின் போது இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்றைய அமர்வின்போது அமைச்சுக்களின் அலுவலக செலவுகளை நீக்கும் பிரேரணையொன்றை சபையில் சமர்ப்பிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!