அரசியல் கைதிகள் விவகாரம் – நாளை மறுநாள் பேச்சு!

நாளை மறுநாள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய சந்திப்பின் போது, அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்றைய சந்திப்பில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினையை கூட்டமைப்பு உறுப்பினர்கள் எழுப்பிய போதே, இதற்கான பொறிமுறை பற்றி நாளை மறுநாள் பேசி முடிவெடுக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் சட்டமா அதிபரும் கலந்து கொள்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!